Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Donnerstag, 12. Juli 2007

அம்மாவின் வாழ்த்துமடல்.

விசாலம் அம்மாவின் வாழ்த்துமடல்.
--------


கவிதைக் குயிலே ,என் அன்புக் குயிலே
என் மகளாகத் தெரிகிறாய்
அன்பைச் சொரிகிறாய் ,
மதி எங்குச் சென்றாலும்
என் நினைப்பிலே நீதான்
கூவி குரல் கொடுத்தாலும்
அகமகிழ்வது நான் தான்
இன்னிசைப்பாடும் இனியச் செல்வியே
பண்ணிசைப் பாடும் ஒப்பற்ற்ச் செல்வியே
காதல் கவிதைக்கு உனக்கோர் இடம்
உணர்ச்சியின் வடிவத்தில் ஒர் தனி இடம் ,
மனம் வெடித்து வரும் கவிதை அழகு படம்
மனச்சாந்திக்குத் தேவை மனத்தில் திடம்
சீரும் சிறப்பும் வேண்டி நிற்கின்றேன் உன்க்காக
அவள் திருவடி சரணம் ,,, பொழிவாள் அருள் உனக்காக

ஒம் நமோ பகவத்யை ஸ்ரீ மீராம்பிகாயை ,,,,,,,,,,,,,,,

அன்புடன் விசாலம்