Sonntag, 7. Oktober 2007

ஏ.கே.ஆர் அவர்களின் மடல்




ஏ.கே.ஆர் அவர்களின் மடல்



அன்புக் குயில்,ராகினி

மழலைகள்.காம் தளத்தை இம்மாதத்தின் கடந்த 6 நாட்களில் கண்ட 258 வாசகர்ககில் 33 பேர் குயிலின் பாடலையும் கதைகளையும் கேட்டுள்ளனர். பிற படைப்புக்கள் எதனையும் விட இது இரு மடங்குக்குக்கும் மேலாகும்.

குயிலே, உன் குரல் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் மிகவும் பிடிக்கும். உனது குரலில் வெளிப்படும் உனது துன்பங்களையும் உனது உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகம், மற்றும் உனது தேசம் முழுதும் படும் இன்னல்களையும் அவர்கள் உணர்கின்றனர். அவை தீர்ந்து அமைதி பிறக்க வேண்டுகின்றனர். உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் விளையட்டும்.

--------------
இதை படித்து சில நிமிடம் ஆனந்தக்கண்ணீர் விட்டேன் என்ன எழுதுவது என்று புரியல..இதில் உங்களுக்குதான் பெருமை எங்கோ.. ஒரு ஓரமாய் என்குரலை பதிவு செய்து போட்டேன். அதுக்கு இத்தனை சக்தியா...? நம்ப முடியல என்குரல் லில் அமைதி கிடைக்குமானல் முதல் என் பெற்றோருக்கு முதல் வணக்கம். அடுத்தபடியாக என்குரலை பதிவு செய்து தரும் படி கேட்டு நான் பதிவு செய்து ஆனுப்பி விட்டு பேசாமல் இருந்தேன் ஒரு நாள் என் குரலை கேட்டுபார்க்கவும் என்று மடல் போட்டு என்னை வியக்க வைத்த சூரியன் எப்.எம் அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்களுக்கும் வணக்கம் அதை கேட்டுவிட்டும் வியந்தேனே...தவிர நான் பெருமை கொள்ளவில்லை . இந்த மடலை படிக்கும் வரை.இப்போ கண்கள் முதல் முதலாக ஆனந்தக்கண்ணீர் கொட்டுகின்றன.வியப்புடன் ஓரு புதிய உணர்வுகளையும். என்னையே எனக்கு அறிமுகம் செய்த உங்களை கண்டுபெருமை அடைகின்றேன். என் தமிழ் நெஞ்சங்களுக்கு என் குரல் நிம்மதியை கொடுக்கும்போது இந்த நிமிடத்தில் இருந்து தமிழ்குயிலாக வாழ்கின்றேன்.
நன்றிஏ.கே.ஆர் உங்கள் அன்புக்கும் உங்கள் ஊக்கத்துக்கும்