Donnerstag, 12. Juli 2007

சுவாதி அவர்களின் வாழ்த்துமடல்.

அன்புத் தோழி!
உனக்குத் தெரியுமா
இப்போது என்னை இயக்குவது
இரண்டு உயிர் என்று?
ஒன்று இறைவன் தந்தது.
இரண்டாவது தோழமைகள்
தந்த நட்பு!
என்னுடைய இரண்டாவது உயிரை நான் உன்னிடமும்
பங்கிட்டுக் கொண்டேன்.
இப்போது தான் அது மிகவும் உணர்வுடன் துடிப்பதை உணர்கின்றேன்.
ஏனெனில் அந்த உயிரில் தமிழும் கவிதையும் கலந்திருப்பதால்...
என் இதயம் இயங்கும் கணங்களில் ஒவ்வொரு துடிப்பிலும் உனக்கான வாழ்த்துக்கள் இருக்கும்!!

உங்கள் ஒவ்வொரு எழுத்து ஆற்றலும் என்னை கவர்ந்துள்ளன மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.


இந்த உயிர்ப்பு மரணமில்லாதது.
நீடூழி வாழ்க!!
அன்புடன்
சுவாதி.

Keine Kommentare: