Montag, 2. Februar 2009



வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது.




உங்கள் வானொலி பணி சிறக்கட்டும். தங்கள் தமிழ் உணர்வு..சாதிக்கட்டும்தமிழினிய தோழி கவிகுயில் அவர்களுக்கு..,வணக்கம்..தமிழக தலைநகர்..சென்னையிலிருந்து..தாயுமானவன்...,தென் கோடியிலிருந்து கொண்டுபோன தமிழை..நீங்கள்..வளர்க்கும் விதம்கண்டு..வியுப்புறுகிறேன்.ஆகிரா அவர்கள்..http://www.tamilliterature.net/ எனும் இணைய தளத்தை..எனக்காகஉருவாக்கி கொடுத்திருக்கிறார்.கவிகுயிலிடமிருந்து..கவிதைகளும்..கதைகளும்..எதிர்பார்க்கிறேன்..இதே முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.தேச எல்லைகள் நம்மை பிரித்து வைத்திருந்தாலும்..வெகு எளிதாய்..தமிழ்இணைக்கச்செய்யும்..அதிசயம்..உண்மை.இந்தியாவை பற்றிய உங்கள் கருத்துருக்களை..ஒருதமிழனாய்..ஒருஇந்தியனாய்..வணங்கி நெகிழ்கிறேன்.மற்றவை உங்கள்..பதில் கண்டு..வெங்கட்.தாயுமானவன்--தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

வருடும் வார்த்தைகள்..
ஒப்பனையில்லா..உணர்வுகள்..
யதார்த்த ரசம் பூசிய
வாழ்கையின் கண்ணாடிவழி
பிரதிபலிக்கிறது..
உன் கவிபிம்பம்.
மீட்டலின் கட்டுக்குள்
உருகும்..
வீணையின் நரம்புகள் உதிர்க்கும்
நாத குழைவுகளாய்
நடமிடுகிறது..
உன் தமிழ்..!
தாளமிசைத்து ஓடும்
நதியின்..
கண்ணுக்கு தெரியாத
கொலுசுகளின்..
சங்கீத அதிர்வுகளாய்
உன் சொல்லாடல்களின்
பின் புலத்தில்..
இசையின் ராஜாங்கம்.
பசிக்கும் மனங்களுக்கு
படைப்புகளால்..
படையிலிடும்..
கவிதாயினியின்
தமிழ் தொடரட்டும்..

Keine Kommentare: