Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Donnerstag, 2. Oktober 2008

விஸ்வா.அமெரிக்காவில் இருந்து

வணக்கம் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் கவிதைப்பூங்கா பார்த்தேன்.
ஆகா!!!! ஆகா!!!! இத்தனை படைப்புக்களை எப்படி உங்களால் முடிந்தது எழுதி குவித்தக்கொள்ள!
ஒவ்வொரு கவிதைகளும். நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து கூத்தாடி மகிழவைக்கின்றது.

அட இத்தனை காலம் நான் எனது வாழ்வை இழந்து விட்டேன் காரணம் இந்த அழகிய நந்தவனத்தை பார்காததால். எனக்கு தமிழ் அதிகம் எழுத வாராது ராகினி இருந்தும் உங்களை வாழ்த்தி சென்ற ஒவ்வொரு மடலையும் படிக்கும் போது எனக்கும் எழுத தூண்டியது.

கவிதை மட்டும் அல்ல உங்கள் குரல் பதிவும் என்னை மயக்கி சென்றது.யாழ் தமிழ் உச்சரிப்பும் குரலும். என்னை அப்படியே அமரச்செய்து விட்டன அப்பாடா...என்ன வசீகரம் உங்கள் குரலில்! வசீகரம் எப்படி உள்ளது என்று பல தடவை கேட்டும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை இன்னமும் எழுதிடாத ரசிகனாய் இப்போ நான்!

வாழ்க யாழ் குயில் ராகினி அவர்களே.

அன்புடன்
உங்கள் ரசிகன்
விஸ்வா.அமெரிக்காவில் இருந்து.

பிற்குறிப்பு.

என்னை பொறுத்தவரை ஒரு ரசிகனாக மட்டும் அல்ல உங்கள் குரலுக்கு அடிமையானவனும் தவறாக என்னாதீர்கள் உங்கள் படைப்பும் குரலும் தான் என்னை இப்படி அமரச்செய்தன .
ஒரே நாளில்.
மீண்டும் வாழ்க வழமுடன். நன்றி.