Mittwoch, 8. Oktober 2008

velkannadasan. rj suryan fm

sagothari raginiyin padaipugal avaradhu kuralileye ketpadhu
yaazhisayodu kalandha vaai paattinaipol inikiradhu................
kaadhal rasam sottum avaradhu kavidhaikal kadhal ennam illadhavarayum
kadhal seyya thoondum...........ulagengum vaazhum tamizharin
kadhukalil kavithai then vaarkum avardhu muyarchigal thodara
vendukiren............................



velkannadasan
rj suryan fm

chennai

Donnerstag, 2. Oktober 2008

விஸ்வா.அமெரிக்காவில் இருந்து

வணக்கம் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் கவிதைப்பூங்கா பார்த்தேன்.
ஆகா!!!! ஆகா!!!! இத்தனை படைப்புக்களை எப்படி உங்களால் முடிந்தது எழுதி குவித்தக்கொள்ள!
ஒவ்வொரு கவிதைகளும். நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து கூத்தாடி மகிழவைக்கின்றது.

அட இத்தனை காலம் நான் எனது வாழ்வை இழந்து விட்டேன் காரணம் இந்த அழகிய நந்தவனத்தை பார்காததால். எனக்கு தமிழ் அதிகம் எழுத வாராது ராகினி இருந்தும் உங்களை வாழ்த்தி சென்ற ஒவ்வொரு மடலையும் படிக்கும் போது எனக்கும் எழுத தூண்டியது.

கவிதை மட்டும் அல்ல உங்கள் குரல் பதிவும் என்னை மயக்கி சென்றது.யாழ் தமிழ் உச்சரிப்பும் குரலும். என்னை அப்படியே அமரச்செய்து விட்டன அப்பாடா...என்ன வசீகரம் உங்கள் குரலில்! வசீகரம் எப்படி உள்ளது என்று பல தடவை கேட்டும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை இன்னமும் எழுதிடாத ரசிகனாய் இப்போ நான்!

வாழ்க யாழ் குயில் ராகினி அவர்களே.

அன்புடன்
உங்கள் ரசிகன்
விஸ்வா.அமெரிக்காவில் இருந்து.

பிற்குறிப்பு.

என்னை பொறுத்தவரை ஒரு ரசிகனாக மட்டும் அல்ல உங்கள் குரலுக்கு அடிமையானவனும் தவறாக என்னாதீர்கள் உங்கள் படைப்பும் குரலும் தான் என்னை இப்படி அமரச்செய்தன .
ஒரே நாளில்.
மீண்டும் வாழ்க வழமுடன். நன்றி.

Montag, 1. September 2008

செல்வக்குமார் பழனிச்சாமி

ராகினி அவர்களுக்கு வணக்கம்,


தங்கள் படைப்புகளின் சிலவற்றை இணையத்தில் தங்களது பதிப்புத்தளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். என் கன்னித்தமிழ் அகிலம் உலவ, அவளின் பல்லக்குத் தூக்கத் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களைப்போன்ற என் இனத் தமிழ் மக்கள் அயல் நாடுகளில் வாழ்ந்து வரும் போதும் தமிழ்த்தொண்டாற்றும் மனப்பாங்கு வியப்புக்குறியது. நான் சற்று அதிகமாகவே அகமகிழ்ந்திருப்பேன், நானும் ஓர் ஈழத்தமிழனாக இருந்திருந்தால். கணவன் மற்றும் குழந்தைகளுடன் நீளாயுள் பெற வாழ்த்துக்கள்.
மங்களம் உண்டாகட்டும்...

இப்படிக்கு,
செல்வக்குமார் பழனிச்சாமி.
-- Selvakumar Palanichamy
64283 Darmstadt
Germany

Donnerstag, 17. Juli 2008

அன்பு கவிக்குயில் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் வலைப்பூவை கண்டு எனை மறந்து உற்கார்ந்து இந்த மடலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

எதை எப்படி என்ன எழுதுவது என்று சிந்திக்க வைத்தன உங்கள் ஆக்கம் குரல்
இரண்டும் அருமையாக உள்ளது வேலை முடிந்தும் காலை எழுந்தும் உங்கள் குரல் சுப்பிரபாதமாக..நம் இல்லம் முழுதும் இசைக்கின்றது என்ன சக்தி என்பதை உணர முடியவில்லை உங்கள் குரலை ஒரு முறைதான் கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கின்றன.
வாழ்க வளமுடன்

அன்புடன் பிரதீபன்

saudi arapia

நன்றி பிரதீபன் கடவுளுக்கும் என் தாய் தந்தைக்கும் தான் நன்றி சொல்லனும்.

http://www.raaga.com/playerV31/index.asp?pick=7724&mode=3&rand=0.1165844380618673&bhcp=1

கருத்துக்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

kavithaikuyil@mail.com



Montag, 14. Juli 2008


ஓ ராகினி,


அன்பின் அழகைக் கண்டேன்.

தெம்பின் வலிமை கொண்டேன்.

வாழ்வில் புதியது ஒன்றும் இல்லை. வாழ்வும் புரிவதும் இல்லை. எனவே அன்பு, அன்பு, அன்பு மட்டுமே புதியது, பழையது, வலியது.

உம்மைப் பற்றி........ குயிலொன்று பிறந்தது, கவிக்குயிலானது. கவிதைக் குயிலின் பக்கங்கள் காணப் பரவசம். இனிய குரலின், தமிழின் அழகை, அன்பின் தமிழின் இனிய குரலைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன். அகம் குளிர்ந்தேன். மீண்டும் வந்து வாழ்த்துவேன். என்றும் வளமோடும் புன்னகையோடும் வாழ வாழ்த்துக்கள்.

ரமணி வைத்தியநாதன்.

சென்னை.
உங்கள் முகம் காணவில்லை நான்.
என் குரலை வைத்து உங்கள் அன்பை கொட்டி தந்தீர்கள் தாயே யார் நீங்கள்! உங்கள் அன்பு கிடைக்க நான் என்ன தவம் பெற்றேன்.

Dienstag, 20. Mai 2008

ராஜா

வணக்கம்
அன்புக்குயில் ராகினி அவர்களுக்கு.

உங்கள் குரலை வைத்தே நான் உங்களை அன்புக்குயில்
என்று அழைத்தேன்
உங்கள் குரல் என்னை நிம்மதி அடையச்செய்கின்றது.
ஏதோ என் வாழ்வில் தொலைந்து போன ஒன்றை மீட்டி தந்த உணர்வுகள் அடைந்தேன்.
உங்கள் யாழ்பாணத்தமிழ் தான் இதற்கு காரணமா..? இல்லை உங்கள் பேச்சின் அழகா..? இல்லை உங்கள் குயிலின் குரலா..?என்று என்னை திக்கு முக்காட வைத்த போதுதான் உணர்ந்தேன் இல்லை இல்லை இந்த முன்று முக்கனியும் சேர்ந்து தான் உங்களை கடவுள் படைத்தான் என்று தெரிய வந்தன.

ஒருநாள உங்கள் பதிவை கேட்க தவறினால் என்னை நான் இழப்பது போல் உள்ளன இதுதான் உங்கள் அழகு தமிழோடு கொஞ்சி விளையாடும் குரல் மகிமை
ஆண்டவன் என்பவன் உண்மையானால் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவேண்டும்
வாழ்க யாழ் குயில் ராகினி


உங்களை நான் யாழ் குயில் ராகினி என்று அழைத்துக்கொண்டு விடை பெறுகின்றேன்.

வாழ்க வளமுடன்
உங்கள் குரலுக்கும் தமிழுக்கும் அடிமைப்பட்டவன் நான்.
அன்புடன்.


சென்னை
ஆர் ராஜா.
நன்றி ராஜா உங்கள் வாழ்த்து மடலை வாசித்த போது. எனக்கு இந்தப்பாடல் நினைவில் வந்ததது.http://www.raaga.com/playerV31/index.asp?pick=26690&mode=0&rand=0.10738195416075902&bhcp=1

Sonntag, 2. März 2008