Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Freitag, 9. Oktober 2009


12 10.09
---------
ராகினி அவர்களுக்கு,வணக்கம்.தங்களது வானொலி நிகழ்ச்சிகளை "e-snips" வழியாக சரியாக கேட்க இயலவில்லை,எனவே உங்களது எழுபது நிகழ்ச்சிகளைக்கொண்ட "CD" யை எவ்வாறு பெறுவது என்பதனை தெரிவிக்க வேண்டுகிறேன். நான் வசிப்பது
தமிழ்நாடு மாநிலம் ,இந்தியா.
அன்புடன்,
சிவகுமார்.

21.10 o9
------
இன்று உங்கள் 101நிகழ்ச்சி உள்ள சீடிகிடைத்தது நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
உங்கள் மழலை குரலில் "இரவின் மடியில்" கேட்டுக்கொண்டே இந்த மின் அஞ்சல் அனுப்புகிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளை ஒய்வு நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,அருமை
யாக உள்ளது, அதுவும் லண்டன் வானொலி நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது உங்கள் மழலை குரலில் இது "லண்டன் தமிழ் வானொலி" என்று ஆரம்பிக்கும் போதே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது

நிகழ்ச்சிகள் முழுவதும் கேட்டுவிட்டு வருகிறேன்.
சிவகுமார்சென்னை
.


----


16.10.09

வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும்முயற்ச்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மன்.நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://isaiarasi.blogspot.com/2009/10/blog-post.html
p.susila
கோவை ரவி

12.10.09

கவிதைக்குயில் அவர்களுக்கு!
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
ஒரு பூங்காவில் சென்று.... இளைப்பாறியது போல்
என் மனது சுகமாய் தூங்கி எழுந்தது!!!!
ஒருபக்கம்

இன்னோரு பக்கம் உங்கள் எழுத்து ஆற்றல் வியக்க வைத்தது
உங்கள் வானொலி நிகழ்ச்சி உங்கள் குரல் என்னை தாலாட்டி சென்றது
"குரல் கவிதை பாடல்" அனைத்தும் கலக்கல் கலக்கல்
கவிதைக்கு பாடல் அழகு
பாடலுக்கும் கவிதைக்கும்
உங்கள் குரல் அழகு
வாழ்க வளமுடன்.

அன்புடன்.
ரசிகன்.
சிவகுமார் காஞ்சிபுரம்
இந்தியா
------

Vanakkam.etr vanoliyilspb yin nikalchsi
Arumayaana thoguppu.
Nandri. 'Enakku Piditha Roja Poovai' -enakku pidiththa paadal.
Anbudan,
V. Gopalakrishnan,
Coimbatore.
6thOct.09
October 7, 2009 7:01 AM