Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Donnerstag, 28. Mai 2009



இனிமையான குரல் பண்பான கருத்துச் சேர்க்கை, 50 நிமிடங்கள் என்றாலும், நான் என்னை மறந்து கேட்டிருந்தேன். ஒவ்வொரு பாடலிற்கு இடையிலும் வரும் சொற்றொடர்கள், பாடல்களிற்கு ஏற்றபடி மிகவும் அற்புதமாக அமைத்து இருக்கின்றீகள்.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் இசைத் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒரு 50 நிமிட உலகம்.

அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரே மாதிரியில்லாமல், நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வேறுபட்ட மாதிரி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்பு அத்தனையும் என்றுமே நெஞ்சை விட்டகலாத தயாரிப்புக்கள்.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்புகளும் ஒவ்வொன்றும் முத்தான முத்துக்கள்.

ஜ ரி ஆர் சர்வதேச வானொலி
எம். பி. கோணேஸ்
canada
-----
nallk kural arumaiyaana ucharippu
ketten ungal kuralai "itr kanada radoi"vil
then saapiduveerkalo
arumaiyaana kural valam
sk. natarajan

------------

கல்யாண்ஜி
திரைக்கதாசிரியர், பாடலாசிரியர்சென்னை.

மதிப்பிற்குரிய கவிதைக்குயில் திருமதி ராகிணி பாஸ்கரன் அவர்களுக்கு.

இனிய வணக்கம்.

தங்களின் வானொலி நிகழ்ச்சிகள் கேட்டு மனசு நிறைந்து போனது!

இலங்கை தமிழில், தங்களின் கவிதை குரல் அடிமனசின் ஆழத்தில் அருமையாக பதிந்து போனது!

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சம்பவத்தை நினைவு படுத்தி விட்டது!

உள்ளே உறங்கிக் கிடக்கும் இசைத்தட்டுகளை, உங்கள் இனிமையான குரல் மறுபடி சுழல விட்டது, ஒரு சுகமான அனுபவம்!

பல வருடங்கள் காதில் கேட்காத பல பாடல்களை திரும்ப கேட்க வைத்த பெருமை உங்களையே சாரும்.

தொடரட்டும் உங்களின் இசைபணி.
வாழ்த்துக்களுடன்,
கல்யாண்ஜி

---------



அன்பு கவிக்குயிலே உங்களின் ரேடியோ தொகுப்பை கடந்த ஒருவாரமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.
அருமையான தொகுப்பு ,இனிமையான குரல் உங்களுக்கு நான் காரில் உங்கள் ஒளிதகடை இப்போது கூட கேட்கிறேன் ஆச்சர்யமாக இதில் நிறைய பாடல்கள் நான் கேட்டதே இல்லை .
அவ்வப்போது உங்கள் கவிதைகளையும் அனுப்பி வையுங்கள்.
நன்றி
ராஜராஜா
http://www.tamilraja.tk/


---------

ஆஹா


பெயருக்கேர்ப்ப குயிலின் குரல் அமைந்துள்ளது. பாடலின் கவிதை மிக உருக்கமாயிருக்கிற்து. பெயரிலுள்ள "கவிதை" "குயில்" என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது கவிதைக்குயிலின் பாடலும் குரலும். அவர்கள் புகழ் உலகெல்லாம் பரவ இறைவன் அருள் நாடும்

மழலைகள்

குருஅசலம்


28.5.09



இன்று என் இல்லம் வந்த என் ரசிகர்கள். இவர்கள்.