Sonntag, 23. Dezember 2007

என் சுரேஷ்


அன்பினிய கவிதைக்குயிலே,
ராகினி அவர்களுக்கு

உந்தன் குரலில்
நீ படைத்த
கதையும் பாடலும் கவிதைகளும்
என் காதுகள்வழியே இன்று
பயணம் செய்தது!.

அதன் நடைச்சத்தம்
நான் கேட்டேன்

உண்மை சொல்கிறேன்!

நான்
ரசித்தேன்.
சில இடங்களில் சிரித்தேன்
வியந்தேன், அழுதேன்.

யாரோ என்னிடம் என்றோ
இப்படியெல்லாம்
சொல்ல ஆசைப்பட்ட
தாகத்தின் தீயை
உங்களின் படைப்புகள்
சமாதானப்படுத்திற்று

குழந்தைபோல்
ஓர் ஆசை
இதை பதிவுசெய்யும்
நேரம்
உங்களருகே
நானிருந்திருக்ககூடாதா
என்ற நிஜம் காண முடியாத
ஓர் ஆசை
என்னில் மலர்ந்து அழுகிறது

அசைவற்றுபோன ஆசைகள்
பலவற்றில் இதோ இன்னொன்று!

வாழ்த்துக்கள்

பாசமுடன்
என் சுரேஷ்

சென்னை நன்றி சுரேஷ் உங்கள் பாராட்டுக்கு வியந்து ரசித்து அழது கேட்டது பாராட்டுக்கு நன்றி.

1 Kommentar:

rahini hat gesagt…

ungkal anpukku nanarikal